WhatsApp Image 2024 09 03 at 10.42.31

ஜனாதிபதித் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.09.2024 அன்று இடம்பெற்றது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. இந்நிகழ்வில் உதவி தெரிவத்தாட்சியகர்  ரீ.ஜெய்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 09 03 at 10.42.31 WhatsApp Image 2024 09 03 at 10.42.32 WhatsApp Image 2024 09 03 at 10.42.33 WhatsApp Image 2024 09 03 at 10.42.33 1