- Details
- 7views
மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிப் பிரிவின் தலைமைக் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த திருமதி குகதா ஈஸ்பரன் பதவியுயர்வு பெற்று செல்கின்றமையினை யிட்டு அவரை பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. - Details
- 6views
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் "மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம் – ஆயிரம் தொல்பொருளியல் தளங்களைப் பேணிப் பாதுகாக்கும் கருத்திட்டம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டம் (04.08.2026) பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.- Details
- 7views
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (31.07.2026) இடம் பெற்றது.
- Details
- 7views
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் (03.08.2026) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
- Details
- 11views
ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் "தேசிய நேர்மை வாரம்" நேற்றைய தினத்தில் இருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சகல அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் தூய்மையான அரச சேவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் "தேசிய நேர்மை நடைபவனி மாவட்ட பிரதான நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது .





