
எதிர் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் 15.10.2024 அன்று இடம் பெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.தேர்தலின் போது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.






