
ஆரையம்பதி - தாழங்குடா லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 13.07.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களது தலைமையில் விவசாயிகளுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டது.இதன்போது கொக்கட்டிச்சோலை மற்றும் தாந்தாமலை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட 5 விவசாய கண்டங்களுக்கான 5000 லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .கே. கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.கே.ஜெகன்நாத், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி, இராணுவ அதிகாரிகள் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.






