மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தராக திரு கணபதிப்பிள்ளை மதிவண்ணன் அவர்கள் 09.01.2023 அன்று கடமையை பொறுப்பேற்றார்.
1994 ஆண்டு அரசபணியில் இணைந்த இவர் கலைப் பட்டதாரியாவார். கல்வி அமைச்சு, பட்டிப்பளை பிரதேச செயலகம் ஆகியவற்றில் முகாமைத்துவ சேவை அலுவலராகவும், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது முகாமைத்துவ சேவை அதிசிறப்பு (சுப்ரா) தர பரீட்சையில் சித்தியடைந்து நிருவாக உத்தியோகத்தராக தெரிவுசெய்யப்பட்டு, நொச்சிமுனை தொழில் நுட்ப கல்லுரியின் பதிவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.நிருவாக உத்தியோகத்தர் திரு மதிவண்ணன் அவர்கள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.





