
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூழல் நேய பசுமை வேலைத் திட்டத்தின் கீழ் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி மாவட்ட மேலதிக அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுற்றுலாத்தளமான கல்லடி கடற்கரையோர பிரதேசங்களில் தேங்கியிருக்கும் உக்காத பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றுவதற்கான சிரமதான பணிகள் இடம் பெற்றது.
இச்சிரமதான நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், 231 இராணுவ படைவீரர்கள், பொலிஸார்,மாநகர சபை ஊழியர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள், சமுர்த்தி சங்கங்கள், கல்லடி பிரதேச இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







