WhatsApp Image 2023 10 18 at 09.33.26

வருடாந்தம் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒக்டோபர் 17ஆம்  திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின்  கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால்  சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட நிகழ்வு நேற்று  17.10.2023 அன்று  இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் சமுர்த்தி திட்டத்தின் கீழ்  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜெயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழ்   இரண்டு வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சீ.புவனேந்திரன்  மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், மாவட்ட பதில் கணக்காளர் எஸ்.எம் .பசீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் மனோகிதராஜ், மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர் ரீ.புவிதரன், கோறளைப்பற்று மத்தி தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத். கல்குடா சக்காத் நிதியப் பணிப்பாளர் சபை உறுப்பினர் எம்.ரீ.எம். அஷ்ரப்,  சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான் எனப் பலர்  பங்கேற்றனர்.

WhatsApp Image 2023 10 18 at 09.33.26 WhatsApp Image 2023 10 18 at 09.33.27 1 WhatsApp Image 2023 10 18 at 09.33.28 WhatsApp Image 2023 10 18 at 09.33.29 1