
பாடசாலை மாணவர்களுக்கு இரு துவிச்சக்கர வண்டிகள் மதகு ஊடகத்தினால் மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. மதகு நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திருமதி. ருக்சிகா மயூரனின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு இடம் பெற்றது."நமது தேவை பூர்த்தியான பின்னர் நல்ல நிலையிலுள்ள பொருட்களை தேவையுடைய வேறொருவருக்குப் பகிரும்" எண்ணக்கருவிற்கமைய மதகு ஊடகத்தின் "Share to Care" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






