WhatsApp Image 2024 08 31 at 14.16.44

ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 31.08.2024 அன்று  இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களான திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், என்.ஜெகன்நாத் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. இதன் நிறைவில் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுக்கும் தேர்தல்கள் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.

WhatsApp Image 2024 08 31 at 14.16.44 WhatsApp Image 2024 08 31 at 14.16.36 WhatsApp Image 2024 08 31 at 14.16.31 WhatsApp Image 2024 08 31 at 14.16.35

WhatsApp Image 2024 08 31 at 14.16.38 WhatsApp Image 2024 08 31 at 14.16.39 WhatsApp Image 2024 08 31 at 14.16.41 WhatsApp Image 2024 08 31 at 14.16.44 1