
மட்டக்களப்பு மாவட்ட புலம் பெயர்வாளர் அமைப்பின் பங்குதாரர்களுக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாட்ட செயலகத்தில் 17.01.2025 அன்று இடம்பெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.எஸ்.எஸ்.பி பிரசன்னா அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன்போது புலம்பெயர் தொழிலாளர்களை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மனித கடத்தல், மனித வியாபாரம், சட்டவிரோத புலம்பெயர்தல், கடல்வழியாக ஆட்கடத்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இதன்போது விளக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.நிகரில்காந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.எம். மலிக் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.







