
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிப்பானது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும்,மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரினா முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் என்பனவற்றில் காலை 8.30 மணி தொடக்கம் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.புதிய மாவட்ட செயலகம்,பிரதேச செயலகங்கள்,வலயக்கல்வி அலுவலகங்கள்,பொலிஸ் நிலையங்கள் என்பனவற்றில் அரசாங்க ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டார்கள்.







