
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வெசாக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 14.05.2025 அன்று இடம்பெற்றது.
ஜயந்திபுரம் விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஹட்ட ஹிரகம தம்ம சிறி தேரரினால் இதன்போது தர்ம போதனைகளும் ஆசியுரையும் வழங்கப்பட்டது. சித்திரை மாதத்தில் வரும் விசாக் பௌர்ணமி நாளில் புத்தபிரானின் பிறந்த நாள் , புத்தபிரான் ஞானம் பெற்ற மற்றும் புத்த பிரானின் பரிநிர்வாணம் அடைந்த மூன்று நிகழ்வுகளும் சித்திரை மாதத்தில் வரும் விசாக பௌர்ணமி நாளில் இடம் பெற்றதனை உலகில் உள்ள பெளத்தர்கள் நினைவு கூறும் முகமாக வெசாக் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் வெசாக் நிகழ்வின் போது கலந்து கொண்டவர்களுக்கு பகல் உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.







