வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேசப்பிரிவிற்கு உட்பட்ட செல்வா நகர் கிராம மக்களுக்கு கூரைப்படங்குகள் 09.12.2019 அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களால் ஒரு தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்திற்குக் கிடைக்க இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கையாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களையும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக மாவட்டத்தின் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.






