
கலாசர அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நெனசர வாசிகசாலை வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பிலுள்ள 14 வாசிகசாலைகளுக்கு புத்தகப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் 25.01.2022 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் ஏற்பாட்டில் பிரதேச செயலகப் பிரிவுகளின்கீழ்இ நாடுபூராகவுமுள்ள பின்தங்கிய வாசிகசாலைகளை வளப்படுத்தும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனூடாக வாசிப்புப் பழக்கத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வாசிகசாலைகளுக்கு இலக்கியம் மற்றும் ஆய்வு நூல்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை கடந்த 2021 காலப்பகுதிக்கான நெனசர வேலைத்திட்டம் கொவிட் 19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. தற்போது இம்மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்து 14 பிரதேச செயலகப்பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய வாசிகசாலைகளுக்கு சுமார் ஒருஇலட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகத் தொகுதிகள் உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரனினால் நூலகர்களிடம் கையளிக்கப்பட்டது.
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ. ஜெய்னுலாப்தீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள்இ பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வாசிகசாலைக்குப் பொறுப்பான நூலகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் 2022 ஆம் ஆண்டிற்காக ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இரண்டு வாசிகசாலைகள் தெரிவு செய்யப்பட்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் புத்தகப் பொதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







