
மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன் அவர்களிடம் 23.10.2024 அன்று கையளிக்கப்பட்டன.
பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 திகதி இடம் பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமை மேற்கொள்ளவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






