கிழக்கு மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் விழிப்புனர்வு கூட்டம் 17.09.2019 காலை மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் நடைபெற்றது. இக் கலந்துரையாட்டில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.டிஎம் .எம்.சரத் அபேகுணவர்த்தன அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விழிப்புனர்வு கூட்டத்தில் புவிச்சரிவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் திரு.அசேல இடவெல, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார், திருகோணமலை அரசாங்க அதிபர் திரு.என்.எ.எ.புஸ்பகுமார மற்றும் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மூன்று மாவட்டங்களினதும் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.தம்மிக்க தயானந்த, திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.பி.ஆர்.எஸ்.நர்கர்போல மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில், கடந்த ஏப்ரல் தாக்குதல்களுக்கு பாவிக்கப்பட்ட சில வெடிமருந்துகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் வர்தக நோக்கில் வெடிமருந்துகளை வழங்குவதில் புதிய சட்ட நடவடிக்கைகளை தெரிவுபடுத்தப்பட்டது. அவ்வாறு வழங்கப்படும் வெடிபொருள்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் சட்ட திருத்தங்களில் காணப்பட்டுள்ள விடையங்களும் ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

வெடி மருந்துகளுக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் ஆகக்கூடிய காலமாக ஒரு வருடமாக வரையறுக்கப்பட்டிருக்கும். இது போன்று மணல், கல்மலைகள் உடைத்தல், கிறவல் போன்றவற்றிக்கும் ஒரு வருடமாக மட்டுபடுத்தப்பட்டிருக்கும் என தெரிவித்தனர்.

புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கு அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், சூழல் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் போன்றோர்கள் எமது திணைக்களத்திற்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

கடல் கணிமங்கள் பாதுகாப்பது மற்றும் வெடிபொருட்கள் பாவனை தொடர்பான விளக்கங்களை பொறியிலாளர் திரு.எம்.ஆர்.எம். பாரீஸ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயக்குமார் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவடைந்தது.

DSC 0881DSC 0885DSC 0892DSC 0895DSC 0900DSC 0923DSC 0932DSC 0941DSC 0957DSC 0972DSC 0934DSC 0925