மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் மகளீரை உதைப்பந்தாட்டத்துறையில் வளர்ச்சிகான செய்யும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் வேண்டுகோளுக்கமைய புலம்பெயர்தோருக்கான சர்வதேச அமைப்பான ஜ.ஒ.எம் நிறுவனம் கனடா நாட்டு நிதி உதவியின் விசேட திட்டங்களை அமுல்படுத்த முன்வந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகி திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த விசேட திட்டம் அமுல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் உதைபந்தாட்ட விளையாட்டு துறையை வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், சத்துணவு வசதிகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மகளீருக்கான உதைப்பந்தாட்ட திறனை வளர்க்கும் மகளீருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று 17.10.2019 இடம்பெற்றது. இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் திரு.அயச கருணாரத்தின, மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இந்த ஆரம்ப சுற்றுப்போட்டியில் பன்சேனை விளையாட்டு கழக மகளீர் அணியும் அம்பிளாந்துறை மகளீர் அணியும் மோதிக்கொண்டதில் "பாரி பன்சேனை" விளையாட்டு கழக அணி 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி ஈட்டிக்கொண்டது. தன்னாமுனை வளர் மகளீர் அணியும் முனைக்காடு மகளீர் அணியும் மோதிக்கொண்டதில் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி ஈட்டிக்கொண்டது.

DSC 1025 resizedDSC 1034 resizedDSC 1017 resizedDSC 1041 resizedDSC 1043 resizedDSC 0055 resizedDSC 0112 resizedDSC 0092 resizedDSC 0058 resizedDSC 0034 resizedDSC 0071 resizedDSC 0142 resizedDSC 0078 resizedDSC 0183 resizedDSC 0188 resized