DSC 0049 resized

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கருணாகரன் அவர்கள் தலைமையில் "சுத்தமான சூழல் ஆரோக்கியமான நாளை" வேலைத்திட்டம்  மாவட்ட செயலகத்தில் 28.01.2022 அன்று இடம்பெற்றது."சுத்தமான சூழல் ஆரோக்கியமான நாளை" எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில்  டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.செயலாளர் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி  விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து  அவற்றை துரிதமாக இல்லாதொழிக்கும் நோக்கில் மாவட்டச்  செயலக  வளாகத்தினுள்  இச்சிரமதான செயற்பாடுகள்  நடைபெற்றுவருகிறன. இச்சிரமதான  செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடைமுறைபடுத்துவதன் மூலம் டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப்பாதுகாக்கமுடிவதுடன், ஆரோக்கியமான சமுதாயத்தினைக் கட்டியெழுப்ப முடியும்.

இச்சிரமதான நிகழ்வின்போது மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கிளைகள் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்யும் பணியில் மிகுந்த உற்சாகத்துடன்  ஈடுபட்டமையினை அவதானிக்கக் கூடியதாய் இருந்ததுடன்  “சுத்தமான சூழல் ஆரோக்கியமான நாளை””எனும் நோக்கை  அடைவதற்கு  பூரண  ஒத்துழைப்பை  வழங்கியமை குறிப்பிடத் தக்கதாகும்.

DSC 0052 resized DSC 0053 resized DSC 0055 resized