- Details
- 382views

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்தின் உன்னிச்சை 6ம் கட்டையில் மிக புராதன பழமை வாய்ந்த புனித அந்தோனியார் தேவாலயமானது கடந்த காலங்களில் ஏற்பட்ட உள்ளுர் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்வுகாரணமாக கைவிடப்பட்டு யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பற்றை காடுகள் அடர்ந்து காணப்பட்டது.
- Details
- 431views

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதானமானதும் பழமையானதுமான ஆயித்தியமலை புனித திருத்தலமான சதாசகாயமாதா திருத்தல திருவிழா கடந்த ஆகஸ்ட் 28 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.09.2020 அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் விசேட ஆராதனையும் திருவிழா இறுதிநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இனிதே நிறைவு பெற்றது.
- Details
- 291views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்று தவிர்ப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான வைரஸ் தொற்றுநீக்கி இயந்திர உபகரணம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவுக்கு 26.08.2020 அன்று கையளிக்கப்பட்டது.
- Details
- 317views

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் செயல்திட்டங்களில் ஒன்றான பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றின் பதிவுச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகளும் சட்ட வழிகாட்டல்களும் எனும் தொனிப்பொருளில் செயலமர்வொன்று 27.08.2020 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 217views

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினால் வழங்கப்படுகின்ற பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளை தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட புதிய கருமபீடம் ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் 26.08.2020 அன்று பிரதேச செயலகத்தில் வைத்து திறந்து வைத்தார்.





