DSC 0451 resized

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது.

DSC 0476 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியின் காரணமாக அழிவின் விழிம்பிலிருந்த சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான நீர்ப்பாசனத்தை அம்பாறை மாவட்ட களுகல் ஓயாவிலிருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபருக்கு கலாபூசணம் ஞானமுத்து பேரின்பம் தலைமையிலான மட்டக்களப்பு விவசாய அமைப்புகள் 13 இணைந்து 15.06.2020 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து பாராட்டுத் தெரிவித்தனர்.

DSC 0023 resized

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் காணப்படும் வடிகான்கள் மழை நீர் வடிந்தோடக்கூடியவாறு சுத்திகரிப்புச் செய்யும் விசேட வேலைத்திட்டம் 10.06.2020 அன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையம் முன்பாகவிருந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

55a5ca62 dbc9 4605 9dd3 83842422a6b8 1 resized

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பிராந்தியக் காரியாலயங்கள் நாடுபூராகவும் 21 காணப்படுகின்றது. இவற்றின் செயல்திறன் மதிப்பீட்டில் மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் முதலிடம் வகிக்கின்றது என புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தவிசாளர் அனுர வல்பொல மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் புதிய இடத்திற்கு இடமாற்றி திறந்து வைக்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தார்.

DSC 0250 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு அரச திணைக்களங்கள் மற்றும் அரச சாரபற்ற திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கடுமையான நடவடிக்கையில் இறங்குவதற்கு மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணி தீர்மானித்துள்ளது.இந்த மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணியின் மீளாய்வு விசேட கூட்டம் இக்குழுவின் தலைவியும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.