- Details
- 527views

சிறுபோக நெல் அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் தற்பொழுது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அரசாங்கம் வழங்கிய உரமானியம் மற்றும் உள்ளீடுகளைக் கொண்டு உற்பத்தி செய்த நெல் உற்பத்தி இவ்வருடம் திருப்திகரமான விளைச்சலை தந்திருப்பதாக மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
- Details
- 530views

பொதுத் தேர்தல் 2020 இற்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்யப்பட்டு அஞ்சல் வாக்களிக்கும் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திற்கு 30.06.2020 அன்று ஒப்படைக்கப்பட்டது.
- Details
- 595views

அம்பாறை மாவட்ட கரை வாகுவட்டை நெல்வயல் கண்டங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வடிந்தோடச் செய்ய மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாயை கூட்டமொன்று 28.06.2020 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 685views

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர் நிலைகளில் நீர் வற்றி மக்களுக்கான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17936 குடும்பங்களைச் சேர்ந்த 58915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் பௌசர்கள் மூலம் இடம்பெற்று வருகின்றது.
- Details
- 547views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தற்பொழுது நாட்டில் பரவலாக அதிகரித்து வருகின்ற வேளையில் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் இடம்பெற்ற டெங்கு முகாமைத்துவக் கூட்ட தீர்மானத்திற்கமைவாக இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.





