DSC 0119 resized

கொரோனா நோய் தக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டு இருந்தநிலையில் அதிகமான அரச திணைக்களங்கள் சீராக இயங்காத நிலையில் தடைப்பட்டு ஒரு சில ஊழியர்களுடன் செயற் பட்டு வந்த அலுவலங்கள் மக்கள் பணிகளை 11.05.2020 முதல் ஆரம்பித்துள்ளது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஏனைய திணைக்களங்கள், நியதிச்சபைகள், கூட்டுத்தாபனங்கள், ஏனைய அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், ஆடைத்தொழில் சாலைகள் போன்றன இன்று செயற்பட்டு வருவது அவதானிக்க முடிந்தது.

01 resized

கொரோனா தொற்று அபாயம் காரணமாக அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை தொலைக்காட்சி மூலமாக மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

DSC 0003 resized

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் புளுக்குணாவி குளத்தினை 05.05.2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையிலான நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் குழுவினர் பார்வையிட்டனர்.

DSC 0081 resized

எதிர்வரும் 11 ஆந் திகதி திங்கட்கிழமை இயல்புவாழ்வைக் மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய சகல அரசாங்க சேவைகளும் முழுமையாக செயல்படவேண்டியது அவசியமாகக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அரச பணிமனைகள் சகலதும் திறக்கப்பட்டு சுகாதாரத் துறையின் நிபந்தனைக்கமைய மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க  செயற்படவிருக்கின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 08.05.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி விசேட கூட்டத்தில் தெரிவித்தார்.

DSC 1073 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகளான புளுக்குணாவி குளத்து நீரை நம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நீர் பற்றாக்குறை தொடர்பாக கடந்தவாரம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிர முயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து சேனநாயக சமுத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.