- Details
- 725views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையும் அரசினாலும் தனியார் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் ஊடாகவும் தனிநபர்கள் மூலமாகவும் கிடைத்த நன்கொடைகள் அனைத்தும் மாவட்ட செயலகம் மூலம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணப்பணி கிரமமான முறையில் நடைபெற்றுவருவதாக அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தெரிவித்தார்.
- Details
- 579views

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வதியும் சமூர்த்தி உதவியைப்பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள சுமார் 3347 குடும்பங்களுக்கும், 263 வயோதிபர் ஊதியம் பெறவும், 314 அங்கவீனர் கொடுப்பனவு பெறவும், 31 கிட்னி நோயாளர்கள் நிதி பெறவும் காத்திருப்போர் பட்டியலிலுள்ளவர்களுக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையிலான உத்தியோகத்தர் குழு 09.04.2020 அன்று நேரடியாக அரசின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலில் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளது.
- Details
- 875views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அபாயம் ஏற்ப்பட்ட காலம் முதல் இன்று வரை கூலித்தொழிலாளர்களுக்கும் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் மாவட்ட செயலகத்தினுடாக பிரதேச செயலங்களின் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.
- Details
- 624views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பனவு மற்றும் வலது குறைந்தோர் கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35000 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு இவ்வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் 09.04.2020 இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
- Details
- 709views

கோவிட் 19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திவரும் ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்த கூலிவேலைதொழிலாளருக்கு உலருணவுகளை அன்பளிப்புச்செய்ய தொடர்ந்தும் பல தொண்டார்வ அமைப்புக்களும் பொதுநல சங்கங்களும் முன்வந்துள்ளன.





