DSC 0892 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த்தாக்கம் இருக்கலாம் என கருதப்படும் நபர்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கடந்த சில நாட்களாக வீடுகளில் தங்கி சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அரசினால் உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார்.

DSC 0521 resized

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதன் பரவலைத் தடுப்பதற்காக தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

DSC 0156 resized

கொடிய கொரோனா வைரசினை மட்டக்களப்பில் இருந்து நீக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  17.03.2020 அன்று இடம் பெற்றது.

DSC 0342 resized

எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஐந்தாவதும் இறுதி நாளுமாகிய 19.03.2020 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.

DSC 0227 resized

எதிர்வரும் ஏப்ரல் 25ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நான்காவது நாளாக மாவட்டச் செயலகத்தில் நியமனப் பத்திரங்களைக் கையேற்கும் நிலையத்தில் நடைபெற்றது.