WhatsApp Image 2024 10 22 at 11.11.14

2024 பாராளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் ஈடுபடும் அத்தாட்சிபடுத்தும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.10.2024 அன்று நடைபெற்றது.

WhatsApp Image 2024 10 22 at 15.22.41 1

மட்டக்களப்பில் அஞ்சல் வாக்குகளை பொதியிடும்  உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அவர்களுடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.10.2024 அன்று  இடம்பெற்றது.

 

WhatsApp Image 2024 10 18 at 09.41.03மட்டக்களப்பில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாண்டபத்தில் 18.10.2024 அன்று இடம்பெற்றது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான   திட்டத்தினை மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ்  இடம்பெற்றது.

WhatsApp Image 2024 10 21 at 15.01.24 1

எதிர்வரும் பாராளுமன்று தேர்தல் நவம்பர் மாதம் 14 திகதி இடம் பெறவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு  2024 பாராளுமன்ற தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர்  மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால்  அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபரும்  தெரிவத்தாட்சி அலுவலருமான  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.10.2024 அன்று நடைபெற்றது. தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. மேலும் வாக்குகளை அத்தாட்சிப்படுத்தும் படிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

 

WhatsApp Image 2024 10 18 at 09.41.03மட்டக்களப்பில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாண்டபத்தில் 18.10.2024 அன்று இடம்பெற்றது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான   திட்டத்தினை மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ்  இடம்பெற்றது.