DSC 0080 resized

மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய  கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

DSC 0049 resized

மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்கார தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்குமான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.

DSC 0017 resized

எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை தனிமைப்படுத்தலிற்குட்படுத்தவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DSC 0019 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று இனங்காணப்படாத பிரதேசங்களில் மாத்திரம் சிகை அலங்கார நிலையங்களை திறப்பதற்கு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 01.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

DSC 0442 resized

மட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையிட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் லிப்ட் தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தால் சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 40 உலர் உணவுப் பொதிளைக் கையளிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் 29.10.2020 அன்று இடம்பெற்றது.