மட்டக்களப்பு மாவட்ட செயலக நிர்வாகத்தின் கீழ்வருகின்ற பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் நடைமுறைகளை காலத்திற்கு காலம் சில மாற்றங்களுடன் செயற்படுத்தல் வேண்டிய தேவை அரசாங்க திணைக்களங்களுக்கு உண்டு. அந்த வகையிலே இது தொடர்பான ஆளுமை விருத்தி செயல் அமர்வு 26.11.2019 அன்று மட்டக்களப்பு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் போசாக்கு உணவுப்பொதிகளும் இலவமாக வழங்கும் நிகழ்வு 24.11.2019 அன்று 10.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி (சூரையடி) எனும் கிராமத்தில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் மற்றும் பயன் கொள்ளும் மக்களுக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக்கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் 20.11.2019 அன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையும் 91 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களாக வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவினர் இன்று(15) மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் பிரதான வாக்கெண்னும் நிலையத்திற்கு வருகை தந்து தங்களின் அவதானிப்புக்களை செய்திருந்தனர்.