ஜனாதிபதி தேர்தல் கடமையில் வாக்கு கணக்கெடுக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு 11.11.2019 அன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக்கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் 1ம் திகதி வரையும் 74 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஐனாதிபதி தேர்தலில் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு 7.11.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் உதவி தெரிவித்தாட்சி அலுவலர் திரு.ஆர்.சசீலன் அவர்களுடனும் இந் தெரிவூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூவருக்கான வாக்குச்சீட்டுக்கள் 15ம் திகதி மட்/இந்துகல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவூனதீவு வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்து மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படும்.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்கள முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 28 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.