மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையினால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் நாவற்குடா கிழக்குப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை நாவற்குடா ஆரம்பப் பாடசாலையில் இருபத்தைந்து (25) குடும்பங்களை சேர்ந்த எண்பத்தேழு(87) பேர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட அனர்த்த நிவாரண நிலையத்துடாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

பாவனையாளர் அலுவலக அதிகாரசபையினால் 27.11.2019 காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புத்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 15ம் திகதிதொடக்கம் 22 திகதி வரையும் 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரிகின்ற வாகன சாரதிகளுக்கான திறன் பயிற்சி கருத்தரங்கு 26.11.2019 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.