ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பில் 428 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐனாதிபதி தேர்தலுக்கான பிரதான வாக்கெண்ணும் நிலையமாக செயற்படவிருக்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரி வளாகத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு நிலமைகளை கண்டறிந்தார்.

மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாட்டுப்பிரிவிற்கு இதுவரை 49 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.