- Details
- 903views
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் பயிற்சிக் கருத்தரங்கு 04.11.2019 காலை 10 மணியளவில் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
- Details
- 888views
மட்டக்களப்பில் கடந்த வாரம் ஏற்ப்பட்டுள்ள கனமழைகாரனமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடையும் அபாயத்தினை குறைக்கும் நடவடிக்கையாக 02.11.2019 அன்று மாவட்ட அரசாங் அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அனுமதியுடன் பிரதேச செயலாளர் திரு.வீ.வாசுதேவனின் நேரடி கண்காணிப்பில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியலாளர் திரு.எஸ்.சசிநந்தன் மற்றும் மீன்பிடித்திணைகள பிரதிநிகள், மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொன்டு வெள்ள நீரை வெட்டிகடலுக்குள் அனுப்பப்பட்டது.
- Details
- 933views
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகவுள்ளமையால் அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த நடவடிக்கைளை ஆராயும் கூட்டம் 02.09.2019 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க திரு.அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 956views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் திட்டமீழாய்வு கூட்டம் 02.11.2019 அன்று காலை மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
- Details
- 826views
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கடும்மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் முழ்கி அழிவடையும் அபாயம் இருப்பதால் முகத்துவாரத்தினை வெட்டி கடலுக்குள் வெள்ள நீரினை ஓடவிடும்படி விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.





