மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 25 ஆந் திகதி தொடக்கம் 29 ஆந் திகதி வரையும் 95 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழை காரணமாக நாளுக்கு நாள் மக்கள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.எஸ். வியாழேந்திரனுடன் அரசாங்க அதிபர் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகாபோகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழையினால் தாழ்ந்த பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் குறித்த தாழ்ந்த பிரதேசத்திலுள்ள நீரை அகற்றும் பணிகளை உள்ளூராட்சி சபைகளுடாக செயற்படுத்துமாறு விடுத்த பணிப்புரைக்கமைய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

DSC 0511 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலை தொடர்பான ஊடகவியாளர் சந்திப்பொன்றினை 02.12.2018 மாலை 4.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தனது அலுவலக கேட்போர் கூடத்தில் நடத்தினார்.