கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவி யேற்றுக்கொண்ட கௌரவ திருமதி அனுராதா ஜகம்பத்  அவர்கள் 13/12/2019 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ முதல் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டார்.

சுவிஸ் உதயம் நிறுவனத்தினால் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் 12-12-2019 அன்று  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக தனிநபர்கள் நிவாரணபொருட்களை கோரி வருவது தொடர்பில் பொதுமக்கள் சற்று விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திரு மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் (07.12.2019) முக்கிய கலந்துரையாடல் 11 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.