போசாக்குக் குறைவான மக்களுக்குரிய போசாக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட திட்டங்களை இனங்காணப்பட்ட போசாக்குக் குறைவான மக்கள் வாழும் எட்டு மாவட்டங்களில்  அமுல்படுத்த  ஜனாதிபதி செயலகம்  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உழவர் விழா  போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் வாரங்களுக்குள் நடத்தி முடிப்பதென மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.வை.பி.இக்பால், அவர்கள் மாவட்ட மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.வை.பி.அசார் அவர்கள் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.கே.ஜெகதீஸ்வரன் அவர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்களின் பங்கேற்பினை வெளிப்படுத்தும் மற்றுமொரு நிகழ்வாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரிவின் கிழ் வரும் சின்ன வன்னியனார் வெளிக் கண்ட பிரிவுக்குட்பட்ட போடியார் குளத்திற்கான புனரமைப்பு சிரமதானப் பணிகள் 06.09.2018 அன்று காலை கொக்கட்டிச்சோலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஸ்ட பெரும்பாக உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (08ஆம் திகதி) பகல் நடைபெற்றது.