மட்டக்களப்பில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக சேறு பூசி வரும் நடவடிக்கையை கண்டித்து எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களும் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டகளப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சர்ச்சைக்குள்ளாயிருக்கும் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் இதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு ஆயரினால் கூட்டப்பட்ட நல்லிணக்க குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின், மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் விசேட திட்டத்திற்கமைய  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் நிர்மாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டிடதொகுதி எதிர்வரும் 12ம் திகதி காலை 10 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் 27.08.2019 அன்று மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.