ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு, சட்டம் மற்றும் நீதி என்பன எவ்வாறு நிலை நாட்டப்பட வேண்டும் என்பது தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு 16.10.2019 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட உளநல விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரில் நேற்று (10.10.2019) காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று கடந்த 07-10-2019 அன்று மாலை களுவாஞ்சிகுடி நந்தவனம் முதியோர் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய அபிவிருத்திக்கான கலந்துரையாடல் கடந்த 09.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளரின் கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வாணி விழாவும் ஆயுத பூசையும் நேற்று 08.10.2019 மிக சிறப்பாக நடைபெற்றது.