மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று 03.10.2019 காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் தினம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் "டேவா" மண்டபத்தில் கடந்த 01.10.2019 அன்று நடைபெற்றது.

சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு எற்படும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூவரஞ்சினி முகுந்தன் அவர்களின் தலைமையில் 27.09.2019 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக சுற்றுநிருபத்தினை அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் பயிற்சிப்பட்டரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று 30.09.2019 நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நன்னீர் மீனவர் சங்கத்தின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இன்று கடந்த 26.09.2019 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.