தேசிய மட்ட மத்தியஸ்த தின முதலாவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் 19.07.2019 அன்று காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

நாடெங்கும் செயல்படும் சிறுவர் இல்லங்களின் முகாமைத்துவங்களை மேலும் மேம்படுத்தி இல்ல சிறார்களின் எதிர்காலத்தினை மேலும் சிறப்பாக கொண்டுவர தேவையான உளவளப்படுத்தல் நடவடிக்கையினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கடின பந்து கிரிக்கட் சமரில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி பாடசாலை அணி இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டி நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும், மட்டக்களப்பு மறைமாநில ஆயர் கலாநிதி திரு.ஜோசெப் பொன்னையா அவர்களும் சிறப்பு  அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தியின் முன்னேற்றங்களை ஆராயும் விசேட நிகழ்வொன்று 18.072019 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மகளிர் அபிவிருத்தி குழுவின் தலைவருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

30 ஆண்டு வரலாற்றை பூர்த்தி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 09.07.2019 அன்று நடைபெற்றது.