- Details
- 13views

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 10.10.2023 அன்று இடம் பெற்றது.
- Details
- 7views
2014/2015 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளைச் செயற்படுத்தலின் கீழ் வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள மோட்டர் சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றை 05 ஆண்டுகளின் பின்னர் உரிமை மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாரடைப்பு மற்றும் அதன் தீவிரமான விளைவுகளை எதிர் கொள்ளுதலுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.10.2023 அன்று இடம் பெற்றது.
- Details
- 10views

தேசிய ரீதியில் அதிக 5S தரச் சான்றிதழினை பெற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டீ.அரங்க குணரெட்ண தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
- Details
- 9views

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்திய கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 29.09.2023 அன்று கல்லடி கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.





