WhatsApp Image 2025 07 17 at 13.27.55

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.07.2025 அன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 'சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு – விளையாட்டுக்கும் இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

WhatsApp Image 2025 07 17 at 13.27.55

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.07.2025 அன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 'சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு – விளையாட்டுக்கும் இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

WhatsApp Image 2025 07 17 at 16.10.14 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் மேற்பார்வையில் புதிய மாவட்ட செயலகத்தில் 17.07.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் நிலைபெறான அபிவிருத்திஇ சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலைபெறான மீள்குடியேற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

WhatsApp Image 2025 07 17 at 16.07.49

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தல் கல்வியையும் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வுஇ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் மேற்பார்வையின் கீழ், புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.07.2025 அன்று நடைபெற்றது. இதன் போது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தல் கல்வியையும் வலியுறுத்தும் பங்குதாரர்களின் பங்களிப்பும் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

WhatsApp Image 2025 07 17 at 16.08.46 1

மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தல் – அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ், தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தில் 17.07.2025 அன்று இடம்பெற்றது.