மட்டக்களப்பில் வலது குறைந்தோருக்கான தேசிய பயிலுநர் விளையாட்டு விழா  நிகழ்வானது மடடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  இந்துக்கல்லூரி மைதானத்தில் 25.02.2025 அன்று நடைபெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள வலது குறைந்தோரின்  விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்டும் முகமாக இப்போட்டிகள் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட சமூக சேவை உத்தியோத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திரகலா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.02.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் அவர்களின் ஏற்பாட்டில் சிறுபோக  நெற்செய்கை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்  இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட  பெண்கள் அபிவிருத்திக்கான மாவட்ட  காலாண்டு  மீளாய்வு கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பில் மகளிர் பாதுகாப்பு  மற்றும்  மகளிர்  வன்முறைகள் தடுத்தல்  தொடர்பான வேலைத்திட்டமானது மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் அருணாளினி சத்திரசேகரம் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  பெண்கள் அபிவிருத்திக்கான மாவட்ட  காலாண்டு  மீளாய்வு கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பில் மகளிர் பாதுகாப்பு  மற்றும்  மகளிர்  வன்முறைகள் தடுத்தல்  தொடர்பான வேலைத்திட்டமானது மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் அருணாளினி சத்திரசேகரம் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 02 24 at 16.11.07

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் வழங்கிவைத்தார். மட்டக்களப்பு  மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவில் கடமை புரியும் உத்தியோகத்தருக்கு இந்நிதி வழங்கி வைக்கப்பட்டது. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரிக்கை முன்வைக்கப்பட்டதனை முன்னிட்டு  முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரனின் ஏற்பாட்டில் நண்பர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் போது உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் மற்றும் நிர்வாக  உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.