WhatsApp Image 2024 05 29 at 10.54.38

மட்டக்களப்பில் அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தின் வெசாக் தாகசாந்தி நிகழ்வுவானது ஐகப் (IHub) நிறுவனத்தின் இணைப்பாளர் என்.சுஜிராஜ் எற்பாட்டில்  நிறுவன உப இணைப்பாளர்  ஆர்.இரோஷா கண்காணிப்பில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த தாகசாந்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

WhatsApp Image 2024 05 28 at 11.56.04 2

மட்டக்களப்பில் இடம்பெறும் கிராமிய வீதிகள்  உட்கட்டமைப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும்  கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு  இராஜாங்க அமைச்சருமான  சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.05.2024 அன்று இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் மணல் வீதியை கிறவல் வீதியாக மாற்றும் செயற்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மக்கள் அதிகம் உபயோகிக்கும்  மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றுவதற்கான ஆலோசனை  இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்டது.

WhatsApp Image 2024 05 21 at 09.08.35

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி்க் குழுத் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.05.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 05 27 at 11.46.33

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு  தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த விசேட கலந்துரையாடல் 27.05.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

WhatsApp Image 2024 05 21 at 09.10.21

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் சிவ நாகதம்பிரான் மணல்வீதியை கிறவல் வீதியாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பன நிகழ்வு 20.05.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.