DSC 0483 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முதலாவது புற்தரை கிறிக்கட் மைதானமான கோட்டமுனை கிராமம் 04.04.2022 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

DSC 0367 resized 

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் ஈழமதி ஜப்பார் எழுதிய மதிபாடும் நதிகள் எனும் கவிதை நூல் மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்களிடம் நூலாசிரியரால் அண்மையில் கையளிக்கப்பட்டது.

WhatsApp Image 2022 04 02 at 06.28.39

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி காத்தான்குடி மண்ணிலிருந்து வாராந்தம் வெளிவரவிருக்கும் வாராந்த பத்திரிகையான "வாரவலம்" பத்திரிகையின் அறிமுக விழா 01.04.2022 ஆம்  திகதி காத்தான்குடியில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 04 02 at 05.55.45

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரதேச மட்ட விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வே.ஈஸ்பரன் மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி திரு.த.பிரபாசங்கர் மற்றும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ஏ.ஆதாம்லெவ்வை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

WhatsApp Image 2022 04 02 at 06.19.56

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களுக்கான அலகுகளை அமைத்துவினைத்திறனுடன் செயற்படுத்தி வரும் அதிபர்கள், பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிரதேசசெயலாளர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் குழுக்களின் எதிர்கால திட்டங்கள்மற்றும் இடைவிலகல் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து செயற்படுத்துவது தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.04.2022 ஆம்  திகதி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.