DSC 0771 resizedமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 27.01.2020 அன்று காலை தைப் பொங்கல் விழாவும் கலாச்சார கூட திறப்பு விழாவும் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் சிறப்பிக்கப்பட்டது.

DSC 0731 resizedமட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் 27.01.2020 அன்று சுபவேளையான 10.35 மணியளவில் மாவட்ட செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக தலமையேற்க வந்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்டசெயலக சகல உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என்போரால் வரவேற்கப்பட்டார்.

IMG 4805 resized2019 - 2020 பெரும்போக வேளாண்மை அறுவடை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளுடைய நெற்களை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கடந்த 24.01.2020 அன்று நடைபெற்றது.

DSC 0252 resizedமட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய உணவுகளுக்கான சிற்றுண்டி நிலைய திறப்பு விழா 24.01.2020 அன்று மாவட்டச் செயலக முன்றலில் அரசாங்க அதிபர் திருமாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் மு.ப 11.00 மணியளவில் இடம்பெற்றது.

IMG 4820 resizedமட்டக்களப்பு மாவட்ட கலாசார கூடம் மாவட்ட அரசாங்க அதிபரினால் மாவட்ட செயலகத்தில் 24.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.