- Details
- 14views

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைபோசாக்குடையவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவற்காக ''தேனகபோஷா'' சத்துமா 29.08.2022 ஆம் திகதி மட்டக்களப்பில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வினை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததுடன், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தியுள்ளார்.
- Details
- 6views

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெண் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு 29.08.2022 ஆம் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. வலுவூட்டுவதனூடாக மாற்றியமைத்தல் எனும் தொனிப்பொருளில் கிழக்கு சமூக அபிவித்தி மையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துவரும் திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வறுமைகோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
- Details
- 7views

மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டு விலைக்கு கூடுதல் விலையில் முட்டைகளை விற்பனை செய்த வர்த்தக நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் முட்டைகள் விற்பனை செய்யப்படவில்லையென மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இச்சுற்றி வளைப்புகள் 24.08.2022 ஆம் திகதி இடம்பெற்றன.
- Details
- 14views

உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டிற்கான பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்தீக் உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.வவுணதீவு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பன்சேனை கிராமம், முந்தானை ஆறு நீர்ப்பாசன திட்டம் மற்றும் கிரான் பிரதேச செயலகத்திற்குற்பட்ட வாகனேரி கிராமம் என்பவற்றில் தனது மேற்பார்வை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் செயல்திட்டங்களை அவதானித்ததுடன் பிச்சையடிச்சேனை குளத்தின் புனர்நிர்மானம் தொடர்பாகவும் தனது ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
- Details
- 9views

இலங்கை அரசின் அங்கீகாரத்தில் உலக உணவுத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வறுமை ஒழிப்புத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அமுலாகின்றன.





