WhatsApp Image 2022 09 21 at 21.19.11

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கல்வி பொது சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2022 09 17 at 06.10.02

நாட்டின் வறுமையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.அதற்கமைவாக சமுர்த்தி திணைக்களத்தினால் "சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை" எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்ட மர நடுகை வாரத்தினை 17.09.2022 திகதி தொடக்கம் 23.09.2022 திகதி வரை பிரகடனப்படுத்தி மரம் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 09 15 at 00.47.09

சமூக மட்ட பிரதேச மக்களின் முழுமையான  பங்கேற்புடன் காட்டு யானைகளின் ஊடுருவலையும் மண்ணரிப்பையும் தடுக்க  ஒரு இலட்சம் பனை மரங்களை வளர்க்கும் செயல் திட்டம் வாகரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2022 09 15 at 01.55.33

''வன்முறைக்கெதிரான வெற்றி" செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 15.09.2022 அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

WhatsApp Image 2022 09 10 at 08.23.40

மனிதவலு மேம்பாட்டு திணைக்களதின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தின் மனிதவலு மேம்பாட்டு பிரிவினரின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் சந்தை 12.09.2022 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லுரி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.